படம் பார்த்து கவி: பள்ளி

by admin 3
7 views

பள்ளி பருவ நினைவுகளைத் தூண்டும் விதமாக
வண்ண வண்ண சாக்பீஸ்கள்,
மனதை கொள்ளை கொள்ளும் மாயாஜாலங்கள்.
கருப்புப் பலகையில் கிறுக்கல்கள்,
கற்பனை உலகத்தின் திறவுகோல்கள்.
சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை,
எத்தனை எத்தனை வர்ணங்கள்!
ஆசிரியர் கையில் நடனம் ஆடும்,
அறிவின் கதவுகளைத் திறக்கும் சாவி.
அந்தப் பள்ளிப் பருவம் இனிமை,
சாக்பீஸ்களின் நினைவுகள் தனிமை.

இ. டி.ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!