படம் பார்த்து கவி: பாசமென

by admin 3
15 views

பாசமென பாசாங்காய் பல்லிளிக்கும் பணப்பித்தர்களின் மத்தியிலே
வாசமதை வீசிவிட்டு வெள்ளந்தியாய் விரிந்திருக்கும் வெண்மலரே
நீலவானின் நிலவதுவாய் சோலை தனில் பூத்தாயோ 
ஆழியினுள் சங்கதனை பிளந்தொளிரும் சிறு முத்தெனவே
பச்சையிலை சிப்பியிலே  வெள்ளொளியாய் சிரித்திருக்கும் சிறுநிலவெனவே
இச்சையெதும் இல்லாதே சில்லெனவே சிலிர்ப்புடனே சிரிக்கின்றாயே
வீசுகின்ற வாசத்திற்கு வேறுதுவும் வேண்டுமென்றும் பேசலையே
சூடுகின்ற சூழலுக்காய் வாசனையோ வெண்ணிறமோ மாறலியே
மலர்ந்து மடிந்து சருகாகி உதிர்ந்துலர்ந்தே போவதனால் 
மலர்ந்திடவும் மறுக்கலையே  மணம் தரவும் மறக்கலையே
தளர்ந்திடவும் தாழ்ந்திடவும் சூழல் பல வந்தாலும்
வளர்ந்திடுவோம் வளர்த்திடுவோம் வளமைமிகு நல்லுறவதனை நறுமலரதுவாய்

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!