பாசமென பாசாங்காய் பல்லிளிக்கும் பணப்பித்தர்களின் மத்தியிலே
வாசமதை வீசிவிட்டு வெள்ளந்தியாய் விரிந்திருக்கும் வெண்மலரே
நீலவானின் நிலவதுவாய் சோலை தனில் பூத்தாயோ
ஆழியினுள் சங்கதனை பிளந்தொளிரும் சிறு முத்தெனவே
பச்சையிலை சிப்பியிலே வெள்ளொளியாய் சிரித்திருக்கும் சிறுநிலவெனவே
இச்சையெதும் இல்லாதே சில்லெனவே சிலிர்ப்புடனே சிரிக்கின்றாயே
வீசுகின்ற வாசத்திற்கு வேறுதுவும் வேண்டுமென்றும் பேசலையே
சூடுகின்ற சூழலுக்காய் வாசனையோ வெண்ணிறமோ மாறலியே
மலர்ந்து மடிந்து சருகாகி உதிர்ந்துலர்ந்தே போவதனால்
மலர்ந்திடவும் மறுக்கலையே மணம் தரவும் மறக்கலையே
தளர்ந்திடவும் தாழ்ந்திடவும் சூழல் பல வந்தாலும்
வளர்ந்திடுவோம் வளர்த்திடுவோம் வளமைமிகு நல்லுறவதனை நறுமலரதுவாய்
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
படம் பார்த்து கவி: பாசமென
previous post