படம் பார்த்து கவி: பொன்

by admin 3
13 views

பொன் திரவம் ஒன்று
பன்னீர் துளியாய் சிதற…
அருவியின் சாரல் போல
வாசனைப் பரப்பும்
ஒளிர்ந்த மாயை…
நிமிடத்தில் தேகத்தில் பரவும்…
புதுவித புத்துணர்வு தந்து செல்லும்…
பூக்களையும், வேர்களையும் தனக்குள் அடக்கி…
பேசும் புது மொழி வாசனை திரவம்…
நாசியில் நுழைந்து மனதை வருடும்…
மெல்லிய காற்றில் மௌனமாய் பேசும்…
இதயம் நிறைக்கும் இனிய நேசம்.

திவ்யாஸ்ரீதர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!