படம் பார்த்து கவி: மரத்தில்

by admin 3
20 views

மரத்தில் வேயப்பட்ட 
கூடாரம் ஒன்று…
கடல் நீலம் பூசிக்கொண்டு…
திரை சீலையின் அழகும்…
மயிலிறகில் வருடப்பட்ட அலங்காரமும்…
இருபுறமும் பச்சை செடிகள் சிரித்து வரவேற்க…
மின்னல் ஒளியாய்
விளக்குகள் பளிச்சிற்று
ஒளிர…
சுகமாய் ராகம் பாடும் தலையணைகளும்…
தரையில் வட்ட விரிப்பு மிருதுவாய் தீண்ட…
புதுமையாக அலங்கரிக்கப்பட்ட ஓவியம்…
செவ்விய புது வாழ்வும்…
கயத்தி மலர்ந்த
கமலம் போல…
மணமக்களின் வேட்கை
மணம்…
சிவிகை போல் ஜொலித்த
அழகிய கூடாரம்.


திவ்யாஸ்ரீதர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!