மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்…சொன்ன பாரதி
அறிந்திருக்க வாய்ப்பில்லை இன்று சின்னஞ்சிறு
குருத்துகளுக்கு இழைக்கப்படும்
பாலியல் கொடூரங்கள் …
அதீத போதை கலாச்சாரம், அலைபேசியால்
தறிகெட்டு விழிகள் இருந்தும் குருடர்களாய்….
மென் உணர்வுகள் இருந்தும் மறந்தவர்களாய்,
மரத்தவர்களாய் போதையெனும் போர்வையில் உலவும்
பேதை மனிதர்கள்… ஆயின்.. மனத்தின்
ஓரமாய் நம்பிக்கைத் துளிர்…நவயுகக்
கலாச்சாரம் எங்கள் சிறுமியருக்குப்
புகட்டும் குட் டச் பேட் டச் பாடம்
தடைகள் யாவும் தகர்த்தே நிமிர்
நன்னடை போடச் செய்திடுமே… அவனியில்
யார்க்கும் அஞ்சா சிங்கக்குட்டிகள் அன்றோ?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: மாதர்
previous post