மின்னும் வண்ணமிட்டாய்
கருநீல இரவில், நட்சத்திரக் கம்பளத்தில்,
மின்மினியாய் சிதறும் வண்ணமிட்டாய்!
ஒளியில் நனைந்து பளபளக்கும் மாயம்
கண்கவர் காட்சி மனதை மயக்கும்!
பச்சை ஒன்று நவரத்தினமாய் தகதகக்க,
பொன்னிற ஆரஞ்சு சூரியத் துண்டுகள்!
தனித்தனியேனும், சித்திரத்தின் அழகாய்,
வானத்து நட்சத்திரம்,
இனிப்பு வடிவம்!
கண்ணாடிப் பளிங்காய், ஒளி உள்வாங்கி,
ஆயிரம் நட்சத்திரமாய்த் துகள்கள் மிளிர,
கள்ளமில்லாத் தெளிவு, மின்னும் பொலிவு,
இனிப்பல்ல, இது ஓவியனின் கலைப்படைப்பு!
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: மின்னும்
previous post