படம் பார்த்து கவி: மின்னும்

by admin 3
3 views

மின்னும் அழகிய கலைவண்ணம்.
பாரம்பரியத்தின் பெருமை பேசும்,
புதுப்பொலிவுடன் ஜொலிக்கும்.
நெக்லஸ், தோடுகள், ஒட்டியாணம்,
ஒவ்வொன்றும் ஒரு காவியம்.
தெய்வீக ரூபங்கள், நுண்ணிய வேலைப்பாடுகள்,
அணிபவரின் அழகை அள்ளித் தெளிக்கும்.
திருவிழாக்களின் நாயகியாய்,
வரவேற்பின் மங்கலமாய்,
தங்கத்தின் ஜாலம், ஜொலிக்கும் பேரழகு,
மனதை மயக்கும் மகிமை.

இ.டி.ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!