முள்ளென சூழ்ந்த தோலென ஆனாலும்
மெல்லென உள்ள(க)மும் உள்ளதே அதனுள்
சுள்ளென வெயிலும் அடித்து ஓய்ந்ததும்
அல் அது சில்லென வந்திடுமன்றோ
நல்லதும் பொல்லதும் தெரிந்திட்ட பின்னே
வல்லது வலியது என்பதை விடுத்து
எல்லை எது என்பதை அறிந்து
வெல்வது அன்பது என்பதை உணர்ந்திடில்
உள்ளவர் அனைவரும் உறவிலே உயர்ந்திடலாமே
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயப்பிரபா_
படம் பார்த்து கவி: முள்ளென
previous post