யாருக்கும் இன்பமளித்து அழகாக எரியும் தீபம்!
எல்லாப் பேருக்கும் ஒளி கொடுக்கும் நல்ல தீபம்!
தராதரம் பார்க்காத அழகு தீபம்!
உருகும் மெழுகை அழகு செய்யும் தீபம்!
நெற்றி வியர்வை நிலத்தை தொட
உழைத்த உழைப்பில் கிடைத்த பணத்தில்
மகிழும் உழைப்பாளி போல. ஜொலிக்க
இன்பம் பொங்க செய்யும் தீப ஒளி!
தீப ஒளி எங்கும் வீசக் கண்டோம்!
மகிழ்ச்சிப் பூ எங்கும் பூக்க கண்டோம்!
பரவசம் எங்கும் பரவ கண்டோம்!
அதனால்….
தங்கிய சோகம் போகக் கண்டோம்!
பொங்கியது மகிழ்ச்சி…..
தங்கியது இன்பம்!
உஷா முத்துராமன்
படம் பார்த்து கவி: யாருக்கும்
previous post