படம் பார்த்து கவி: வண்ண

by admin 3
10 views

வண்ண வண்ண சுண்ணக்கட்டி கண்ணைக்கவருதே
எண்ணமதில் சின்னவயது வந்து போகுதே
வெள்ளெழுத்தை மட்டும் கண்ட
கரும்பலகையும்
பலவண்ணமாய் ஆகுமே கலை விழாக்களில்
கோலமாவே கண்டிடா வாசல்கள் கூட
கோலாகலமாகுமே வண்ணங்களால்  சிறப்பு தினங்களில்
பாலவயது பள்ளியில் பயின்ற போதிலே
பாராட்டியே ஆசிரியர் தருவதுண்டு சுண்ணக்கட்டிகள்
சிறப்பெனவே சொல்லிடவே தந்திடுவார் வண்ணக்கட்டியாய்
சிறுதுண்டு உடைந்திடினும் மனமும் உடையுமே

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_‌ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!