வண்ண வண்ண சுண்ணக்கட்டி கண்ணைக்கவருதே
எண்ணமதில் சின்னவயது வந்து போகுதே
வெள்ளெழுத்தை மட்டும் கண்ட
கரும்பலகையும்
பலவண்ணமாய் ஆகுமே கலை விழாக்களில்
கோலமாவே கண்டிடா வாசல்கள் கூட
கோலாகலமாகுமே வண்ணங்களால் சிறப்பு தினங்களில்
பாலவயது பள்ளியில் பயின்ற போதிலே
பாராட்டியே ஆசிரியர் தருவதுண்டு சுண்ணக்கட்டிகள்
சிறப்பெனவே சொல்லிடவே தந்திடுவார் வண்ணக்கட்டியாய்
சிறுதுண்டு உடைந்திடினும் மனமும் உடையுமே
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
படம் பார்த்து கவி: வண்ண
previous post