வாடிவாசல் திறக்க,
வந்தது சீற்றம்!
காளையின் கொம்புகள்,
கம்பீர தோற்றம்.
மண்ணின் மைந்தர்கள்,
மார்பு நிமிர்த்தி;
அடங்கா காளையை,
அணைக்கத் துணிந்து.
யுத்தம் இதுவல்ல,
வீரத்தின் ஆட்டம்;
பாரம்பரியப் பெருமையின்,
பாசமிகு பாடம்.
திமிறும் காளையின்,
திகட்டாத வீரம்;
தழுவும் தமிழனின்,
தளராத தீரம்.
கண்களில் தீர்க்கம்,
கைகளில் வேகம்;
இது வெறும் சண்டையல்ல,
கலாச்சார மோகம்
ஜல்லிக்கட்டு தமிழன்
உயிரில் கலந்தது;
தமிழரின் பண்பாட்டின்,
தங்கமெனப் பொலிந்தது!
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: வாடிவாசல்
previous post