படம் பார்த்து கவி: வானம்

by admin 3
23 views

வானம் அஸ்தமிக்கும் வேளையிலே,
கைக்குள்ளே தவழும் ஓர் முழு நிலவு.
ஒளியாய்ப் பொழியும் அதன் கிரணங்கள்,
நீராய் வழிந்து கடலில் கலக்குதடி.
அதோ, பார்! கடலலைகள் அதைப் பிரதிபலிக்க,
வானமும் கடலும் ஒன்றாய்க் கலக்குதடி.
இந்த அழகிய காட்சி என் கண்ணுக்கு விருந்தாக,
உன் இதயத்திலும் இதே ஒளி வீசுதடி.

இ.டி.ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!