வெண் நீலவானில்
கலையும் கருமேகமாக
கவலையான மனதை
களையும் இசையாக
காரிகையின் கால் கொலுசு
பாவை உந்தன்
பாதம் தீண்டும்
அலைகளோடு கரை
சேரும் சிப்பிக்குள்
முத்தான கால் கொலுசு
கடைக்கண் பார்வை
கார்மேகக் குழல்
பூவையின் புன்னகை
அத்தனை அழகையும் மிஞ்சி
காற்றில் தவழ்ந்து
என் காத(தி)ல் சொல்லும்
கன்னியவள் கால் கொலுசு
நா.பத்மாவதி
படம் பார்த்து கவி: வெண்
previous post