படம் பார்த்து கவி: வெள்ளை

by admin 3
27 views

வெள்ளை வெளேரென்ற போர்வையிலே இருக்கும் கரடியாரே                                                                                 உன் நிறம் இங்கு இளம் நீலம் ஆனதன் காரணம்
தான் என்ன கரடியாரே?
உறைந்த பனி நிலத்திலே வாழும் கரடியாரே
குளிர் தாங்கும் அடர்ந்த உரோமம்  உனக்குண்டு
அசைந்தாடி கம்பீரமாய் நடக்கும்  நடையே தனி அழகு
மீன் பிடித்து
வயிறார உண்ணும் கரடியாரே
துருவப் பனியில் தனித்து உலவும் கரடியாரே
தன் குட்டிகளை அன்போடு அரவணைக்கும் கரடியாரே
வலிமையான
பனி கரடியாரே
உன்னிடம்  நாங்களும் கற்றுக்கொள்ள நிறைய உண்டு கரடியாரே

இ.டி.ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!