வஞ்சி சொல்லும் போட்டி கதை: மழையே மழையே வா வா

by admin 2
47 views

எழுதியவர்: உஷாமுத்துராமன்

நந்தினி  ஒரு பரபரப்பான நகர வாழ்க்கையில் உழைத்து கொண்டிருந்தாள். வேலை, பொறுப்புகள், மற்றவர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை எண்ணி எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பாள். காலையிலிருந்து இரவு வரை ஒரே ஓட்டம்.

அந்த நாள் அலுவலகத்தில் வேலை நிறைவு செய்தவுடன், வழக்கம்போல. நந்தினி  வேகமாக பஸ்ஸை பிடிக்க ஓடினாள். அவளுடைய இரண்டு சக்கர வாகனம் சர்வீஸ் கொடுத்திருந்ததால் இப்படி பஸ்ஸில் செல்ல வேண்டிய ஒரு கட்டாயம் . ஆனால் எதிர்பாராத விதமாக, இரவு வானம் கருமை யாகியது. மின்னல் விழுந்தது. சில நொடிகளுக்குள், பெரும் மழை பொழிய ஆரம்பித்தது.

நந்தினி மழையில் நனைந்து கொண்டு செல்லலாம் என்று நினைத்தாலும் உடல் நலக்குறைவு வந்துவிடுமோ என்று மனதிற்குள் ஒரு பயம் வர இந்த மழைக்கு ஒதுங்க இடம் தேடினாள்.. 

ஆனால் திடீரென்று, நந்தினி நின்று விட்டாள்.. பல ஆண்டுகளாக மழையில் நனைவதை மறந்து போனதை நினைத்தாள்.. சிறு வயதில் தோழிகளுடன் மழையில் விளையாடிய நேரங்களை நினைவு கூர்ந்தாள்..

இன்று அவளுக்கு வேலை, பொருளாதாரம், எதிர்பார்ப்புகள்—இவையே எல்லாமாகிவிட்டன. ஆனால் இந்த மழை அவளுக்கு குழந்தைப் பருவ நினைவுகளை மீண்டும் கொண்டுவந்தது.

அவள்  மெதுவாக துப்பட்டாவை  எடுத்து தலையில்  தன்னையே மறந்து, இரவு மழையில் நடக்கத் தொடங்கினான். தண்ணீர் அவளது முகத்தில் ஒட்டிக்கொண்டது. அவள் கால்களை சாலையின் தண்ணீரில் துடைத்தாள்.  ஒரு மின்சார ஒளியில் அவள் முகத்தில் நீர்த்துளிகள் தெளிக்க அது பிரதிபலிக்க, அவளுக்குள் ஒரு சுதந்திர உணர்வு வந்தது போல் மகிழ்ச்சி அடைந்தாள்.

அந்த இரவு, நந்தினி  வீடு திரும்பும் போது, உடல் முழுவதும் நனைந்திருந்தாலும், மனது களிப்பாக இருந்தது. நீண்ட நாட்களாக அவள் உணராமல் இருந்த மகிழ்ச்சி, அந்த மழை முத்தங்களால் திரும்ப வந்தது.

மழை மட்டும் ஒரு பருவ மாற்றம் அல்ல. அது சில நேரங்களில் வாழ்க்கையின் அழகை மீண்டும் உணர்த்தும் ஒன்று! 

மழையை ரசிக்க தெரிந்தவர்களால் மட்டுமே மழையின் அருமையை உணர முடியும்  என்று உணர்ந்த நந்தினி வீட்டிற்குள் ஆசையுடன் நுழைந்தாள்.

முற்றும்!..

You may also like

Leave a Comment

error: Content is protected !!