வாரம் நாலு கவி: பாடம்

by admin 3
25 views

பாடம் படிப்பிக்குமிடமே பள்ளிக்கூடமாம்
ஏடும் எழுத்துமா கற்பிக்கின்றன
படும் பாடெல்லாமும் படிப்பினையன்றோ
பட்டறியும் பகர்ந்திடுமே பலப்பலவாய்
பாருல(கே)கும் பள்ளிக்கூடம் தானன்றோ
பார்ப்பவையும் கேட்பவையும்
படிப்பினைகளாகிடுமே
படிப்பதனை பெற்றிடுவோம் அனைத்திலுமே
துடிப்பதனை உடல் நிறுத்தும்வரை
துரத்திவரும் தீயவைகள் தகர்த்திட்டே
தரமுயர்ந்து தலைநிமிர கற்றிடுவோமெப்போதுமே..

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!