வெட்ட வெளி வானம்பாக்கும்
பொட்டல் வெளி
காட்டினிலே….
கொட்டு மழையோ
குடிசைக்குள்ளே…
தொட்டெழுப்ப கண் விழிச்சேன்.
விட்டுப்போன
தூக்கத்தால
பட்ட மரம் போல நானும் நட்ட நடு ராவினிலே
கொட்ட, கொட்ட
சாஞ்சிருப்பேன்.
சொட்டு ரத்தம்
உள்ளவர
ஒட்டுப்போடும் மூட்டப்பூச்சி
விட்டு வச்சதாலே
இப்போ
கட்டுடம்பும் கெட்டுப் போச்சி!
துட்டு கையில் உள்ளவர
பட்டுக் கன்னம் காட்டியவ
நட்டப் பட்டு
நின்ன போது
சிட்டுப் போல
விட்டுப் போனா….
எட்டுதிக்கு சுத்திவந்தும்
பட்ட கஷ்டம் தீரவில்ல…
கிட்டுமுன்னு போன பந்தம்
சுட்டதால சொந்தமில்ல…
“சோழா “புகழேந்தி