எழுதியவர்: நா.பா.மீரா
சொல்: அன்னாசி
ராதாகி ருஷ்ணன், வசந்தி ,ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வீட்டுத் தோட்டப்புல்வெளியில் விருந்து. மகன் ஆதில் மேல்படிப்புக்காக லண்டன் செல்லவிருந்ததால் , நண்பர்கள் , உறவினர்கள் கூடியதில் கொண்டாட்டம்தான். .
நகரும்மா, பெரிய மனுசங்க வீட்டு விருந்துல வந்து கலாட்டா பண்ணுறியே ,இதுல அவங்கதான் அழைச்சாங்கன்னு பொய் வேற?
வெளியே வந்த தம்பதியர் விவரம் சொல்லி மரியாதையுடன் அந்தப் பெண்மணியை உள்ளே அழைத்துச் சென்றனர்.
ஆதில், பாட்டிம்மா யாருன்னு தெரியுதா?
சற்றே குழம்பியவனிடம் , அன்னாசிப்பழம் .. உடனே முகம் மலர அந்த மூதாட்டியை அணைத்து விடுவித்ததுடன் பாதம் பணிந்தான்.
இவங்கதான் இன்னைக்கு நம்ம சிறப்பு விருந்தினர்.
ஆதிலோட குழந்தைப் பருவத்துல, எங்களுக்குள்ள உருவாகயிருந்த இடைவெளிய, கண்ணா , இந்த அன்னாசிப்பழம் பாரு, வெளியே தோல் கரடுமுரடா, உள்ளே இனிப்பான பழம். அது மாதிரிதான் உன் பெற்றோரும், எடுத்துச்சொல்லிப் பக்குவப்படுத்தினாங்க.
அருமையான செவிலித்தாய், ராதாகிருஷ்ணன் சொல்லி முடிக்க, அங்கிருந்த அனைவரும் அவளை நோக்கிக் கைகூப்பியதைக் கண்ட காவலாளி வாய் பிளந்தான்.
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.