எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
சொல்: சந்தனம்
நான் ஒரு நாத்திகன். எனது டீன் ஏஜ்ஜில் நான் நாத்திகன் ஆனேன். எல்லாம் மார்க்ஸ் உபயம்.
பின்னர் நான் இருந்த அமைப்பில் இருந்து வெளியேறினேன். பிறகு என் அம்மா கோயிலுக்கு போகும் போது நானும் செல்வேன்.
பிரசாதம் கொடுப்பார்கள். அவ்வளவு ருசி.
புளியஞ்சாதம்..
சாம்பார் சாதம்..
பொங்கல்…
என்று வித விதமாக கொடுப்பார்கள்.
நான் பிரசாதம் சாப்பிட ஒரே வேட்கை..!
எப்படி இவ்வளவு ருசி..? என யோசித்தேன். கடவுளுக்கு நைவேத்தியம் செய்வதால்
தான் இவ்வளவு ருசி என நம்பினேன்.
பிறகு எங்கு அன்னதானம் நடந்தாலும் தவறாமல் கலந்து கொள்வேன். அதுவும் ஐயப்பன் ஸ்வாமி அன்னதானம் எங்கே நடந்தாலும் தவறாமல் கலந்து கொள்வேன்.
காலம் செல்ல செல்ல நான் ஆத்திகன் ஆனேன். என்று என நிச்சயமாக சொல்ல முடியாது.
இப்போது நான் ஒரு ஆன்மீகவாதி. இது ஒரு பரிமாண வளர்ச்சி.
கடவுள் = கடந்து + உள்ளவர்
கடவுள்= உள்ளம்+ கடந்தவர்
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.