எழுதியவர்: நா.பத்மாவதி
சொல்: ஊஞ்சல்
தாத்தா வீட்டிற்கு போவது என்றாலே அனுக்குட்டிக்கு ரொம்ப சந்தோஷம். நகரிலேயே வளர்ந்தவளுக்கு பசுமையான வயல்வெளிகளையும், வெள்ளந்தியான மனிதர்களையும் காண மிகுந்த உற்சாகத்துடன் கிளம்புவாள்
குறிப்பாக தாத்தா வீட்டில் நன்றாக கடைந்தெடுத்த கரும் அரக்குத் தேக்கில், பளவென, வெளி உத்தரத்தில் தொங்கும் ஊஞ்சல் தான் அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.
கொஞ்ச நேரத்துக்கு இருவர் உட்கார ஒருத்தர் தள்ள என மாறி உட்காருவதும் தள்ளுவதுமாக ஊஞ்சல் விளையாட்டு குழந்தைகளுக்கு இஷ்டமான விளையாட்டானது.
கால்கள் தரையில் படாமல், வானிலும் பறக்காமல், ஒரு வித உயரத்தில் பாதுகாப்பாய் ஆடிக் கொண்டிருக்கும் தருணம் நாம் ஆடுகிறோம் என்பதை மறந்து, உத்தரம் , வாசல் ஏன் வீடே ஆடுவதாய் தோன்றும் காலங்கள் இனி வருமா?? 🤔
ஏனெனில் இப்போ அனுக்குட்டி
வளர்ந்து படித்து பெரிய பெண்ணாக கல்யாணம் பண்ணிகிட்டு வெளிநாட்டுல வாழ்ந்தாலும் தாத்தா வீட்டையும், ஊஞ்சலையும் மறக்க முடியாமல் அவள் விடும் ஏக்க பெருமூச்சை யாரறிவார்??
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.