100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: தேன்சிட்டு ஜோடி

by admin 3
69 views

எழுதியவர்: யசோதா பழனிச்சாமி

சொல்: முட்டை

தேன்சிட்டு ஜோடிகளின் இரைச்சல் கேட்டுக் கொண்டே இருந்தன. அங்கே இங்கே போய் வந்தன. ஒரு நாள் கூட இப்படி சத்தம் போடாதே என்று எட்டிப் பார்த்தேன்.

ஜோடிகள் இரண்டும் தன் அலகில் கவ்விக் கொண்டு வந்த, குச்சிகளையும்,பஞ்சுகளையும், சணல்களையும் வைத்து இரண்டு வெற்றிலைகளை சேர்த்து பின்னி இழைத்துக் கொண்டிருந்தது.

கூட்டை வடிவமைக்கும் விதம் எனக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுத்தது.  இறைவன் சிறு உயிரினங்களுக்கு கூட எவ்வளவு மூளையைக் கொடுத்திருக்கான் என்று யோசித்துக் கொண்டே என் வேலைகளை தொடரச் சென்றேன்.

அடுத்த நாள் காலையில், தாங்கள் கட்டிய கூட்டினுள் தேன் சிட்டு அழகாக உட்கார ஆரம்பித்தன. ஒரு வாரம் கடந்து குருவி இல்லாத நேரம் பார்த்து, நான் கூட்டை எட்டிப் பார்த்தேன். அங்கு முட்டையிட்டியிந்தது. அதற்காக தான் கூட்டை கட்டியிருக்கிறது. இன்னும் ஒரு இருபது நாளில் முட்டைக்குள்ளிருந்து வரும் குஞ்சுகளை பார்க்க நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

முற்றும்.

📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!