விழுவதும் மீண்டு எழுவதும்
இயல்பென உணர்த்தும் மெழுகே!
உடல் உருக்கி ஒளிர்வதும்
தண்ணீராய் நீ கரைவதும்
மீண்டும் திடமாக எழுவதும்
தாய்மைக்கு உரிய பண்பே!
உன் சுடருக்கும் சிறப்பு
தாய்மை குணம் அதிலிருக்கு
தீக்கனலில் அனல் மிகக்குறைவு
ஒளிவெள்ளம் பரவும் நாலாபுறமும்
சர். கணேஷ்