படம் பார்த்து கவி: நெருப்பத்

by admin 3
17 views

நெருப்புத் தணலில் கருப்புத் தேள்
வெறுப்பைத் தவிர வேறெண்ணம் என்னவென்றே
பொறுப்பாய் யோசிக்க சிந்தையுள் வந்ததை
மறுப்பேதும் இல்லாதே வார்த்தையாய் வடிக்கிறேன்
தேளும் தணலும் தீண்டினால் தீமையே
பாழும் உலகிலே பாசமென பாசாங்காய்
நாளும் நல்லவர் போல் நடித்திடும்
ஆளும் உளரே அறிவதும் எங்ஙனம்
வாழும் வாழ்விலே  பாசமே விசமாக
சூழும் நிலையதன் வீரியத்தை காட்டிலும்
தேளும் தீயும் தீதில்லை என்பேனே!!

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!