நெருப்புத் தணலில் கருப்புத் தேள்
வெறுப்பைத் தவிர வேறெண்ணம் என்னவென்றே
பொறுப்பாய் யோசிக்க சிந்தையுள் வந்ததை
மறுப்பேதும் இல்லாதே வார்த்தையாய் வடிக்கிறேன்
தேளும் தணலும் தீண்டினால் தீமையே
பாழும் உலகிலே பாசமென பாசாங்காய்
நாளும் நல்லவர் போல் நடித்திடும்
ஆளும் உளரே அறிவதும் எங்ஙனம்
வாழும் வாழ்விலே பாசமே விசமாக
சூழும் நிலையதன் வீரியத்தை காட்டிலும்
தேளும் தீயும் தீதில்லை என்பேனே!!
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா ஜே ஜெயபிரபா_
படம் பார்த்து கவி: நெருப்பத்
previous post