கருகிய கைகள் ஏந்தும் குருதிப் பானம்,
குடிகாரனின் சோக கீதம் ஒலிக்கிறது.
நிழல்கள் திரையிடும் கும் இருட்டு மதுக்கூடங்களில்,
துயரத்தை மூழ்கடிக்கிறேன், இரவும் பகலும் நான்.
போதையின் அரவணைப்பு, என் நெஞ்சின் வெறுமைக்கு ஆறுதல்,
விரைந்து வரும் அமைதி, ஆனால் நிலையற்றது அது!
உதிரம் சிந்தும் கோப்பையை உறிஞ்சும் வேளையில் இன்பம்,
தன் உதிரமே விஷமென உணரும்போதுதான் உண்மை விளங்கும் அவனுக்கு!
இ.டி. ஹேமமாலினி
படம் பார்த்து கவி: கருகிய
previous post