கண்ணாடி கோப்பையில் செந்நிறம் மின்னும்,
பழுத்த மிளகாய் கனிந்து சிரிக்கும்.
தீயின் சுவாசம் தன்னுள்ளே அடக்கி,
பார்க்கும் கண்கள் பரவசத்தில் திளைக்கும்.
உன் காரம் வெளியில் தெரியாவிடினும்,
உள்ளுக்குள் கனல் ஒன்று ஒளிந்திருக்கும்…
சுவைக்கத் துணிந்தால் தெரியும் அதன் வீரம்,
சிறு உருவில் பெரிய வீரியம் காட்டும்.
சிவப்பு நிறம் ஒரு போதை தருதே,
கண்ணாடி சிறையில் காட்சி கொள்ளுதே…
உன் அழகை ரசிக்கிறேன் மெல்ல,
உன் காரம் நினைத்து உதடு நடுங்கி துடிக்கிறதே!
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: கண்ணாடி
previous post