வானை நோக்கி இந்தத் தெளிப்பான் ஏனோ?
பூமி எங்கும் நாற்றம், பொறுக்க முடியலைதானோ!
மனித மனங்கள் செய்த வினை இதுவோ?
சுத்தம் செய்ய தெளிப்பான் மட்டும் போதுமோ?
ஒவ்வொரு மூச்சிலும் கசக்கும் இந்த புவி,
திருத்தினால் ஒழிய வழியில்லை இனி…
மனித மனம் மாறாத வரை, வீணே முயற்சி,
சுயநலச் சேற்றை கழுவ வேண்டாமோ?
வானம் பார்த்து அழும் இந்த பூமித்தாய்,
மனித மனங்களே, திருந்துங்கள் இனியாவது!
குப்பைகள் நிறைந்த மனதால் கெட்டது பூமி,
தூய்மை எண்ணம் கொண்டால் வருமே சாமி!
ஒவ்வொரு உயிரும் வாழும் உரிமை பெற,
மாசு இல்லா உலகை படைக்க விரைந்திடுவோம்!
மனித மனங்களே, விழித்தெழுந்து வாருங்கள்!
இ .டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: வானை
previous post