படம் பார்த்து கவி: பாட்டிலுக்குள்

by admin 3
15 views

பாட்டிலுக்குள் தேன் உறங்க,
சுற்றிச் சுற்றி தேனீக்கள் சங்கமிக்க,..
வாசனை  வந்து தீண்ட..
ஏங்கும் சிறகுகள், அடையத் தூண்ட!
தேனீக்கள் சுற்றும் முற்றும்
சிறகசைத்து ரீங்காரம் செய்யுதே..
பாட்டிலுக்குள் அடைபட்ட தேன்,..
விடுதலைக்காக ஏங்குதே மனமே!
வெளியே சுதந்திரக் காற்று வீச,..
உள்ளே இனிமையின் தனிமை பேச..
சுற்றும் தேனீயின் சிறு விருப்பம்,..
ஒரு துளி தேனில்தான் முழு உருவம்!

இ.டி. ஹேமா மாலினி.

You may also like

Leave a Comment

error: Content is protected !!