படம் பார்த்து கவி: அதரங்கள்

by admin 3
15 views

அதரங்கள் தாங்கிய மெல்லாடை வண்ண
வண்ணமாய் கண் கொள்ளாக் காட்சிதான்
ஆயின் சாயம் பூசிய உதடுகள்
மெள்ளவும் விழுங்கவும் தவித்திட ஏனிந்த
அவஸ்தை ?  ரோஜா ராணிகளின் ஏக்கப்
பார்வைதனை… பெண்ணவள் உதடுகள் எங்கள்
வசமென கர்வம் தாங்கியே எதிர்கொள்ளும்
சாயக் குப்பிகள் அறியுமா என்ன
தங்கள் சாயம் வெளுக்கும் நாள்
வெகு தொலைவில் இல்லை என்றே?


நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!