படம் பார்த்து கவி: நாயின்

by admin 3
14 views

நாயின் அருகே… நண்பனவன் உறங்க,
அன்பின் நிழலில் அமைதி பொங்க…
இரு உயிர்கள் ஒன்றாய் இணையும் காட்சி,
பாசத்தின் மொழியில் பேசும் மாட்சி.
அவனுக்கு இவன் காட்டும் விசுவாசம் ஆழம்,
இவனுக்கு அவன் காட்டும் பாசம் மேலாம்.
ஒருவர் நிழலில் ஒருவர் இளைப்பாற,
உண்மையான நட்பின் காட்சி இது பாரீர்..
பிரியமான தோழர்கள் இவர்கள்தாம்,..
ஒருவருக்கொருவர் துணை நிற்பார்தாம்.
நிபந்தனையற்ற அன்பின் உருவம் இங்கே,
நாயும் மனிதனும் உறங்கும் அழகே.!

இ.டி.ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!