படம் பார்த்து கவி: தெய்வம்

by admin 3
15 views

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன – சர்வேஸ்வரா
வாழ்வின் பொருள் என்ன – இங்கு
நான் வந்த கதை என்ன
ஒளிவீசும் பட்டணத்துச் சாலையிலே
நாய்கள் நடமாடும் நகர்புற வீதியிலே
நானென்ன படுத்துறங்கும் நாய் என்ன – சர்வேஸ்வரா
ஆறடி நிலம் தானே ஆதாரம்
அரையடி நிலத்திற்கு ஏன் ஆவேசம்
கள்ளிக்கு  தண்ணீர் ஊற்றும் காலமிது –
காலத்தை கடந்து போகும் வேகம் இங்கு சர்வேஸ்வரா
பிழைப்பு என்று வாழ்ந்தாலோ
வாழ்வு அற்று போகும்
வாழ் வென்று பார்த்தால்
பிழைப்பு வலியற்ற போகும் இதில்
வீடென்ன இந்த வீதியென்ன
குறைக்கும் நாய் என்ன
குழையும் நான் என்ன- – சர்வேஸ்வரா
     

சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!