படம் பார்த்து கவி: வெண்

by admin 3
12 views

வெண் நீலவானில்
கலையும் கருமேகமாக
கவலையான மனதை
களையும்  இசையாக
காரிகையின் கால் கொலுசு
பாவை உந்தன்
பாதம் தீண்டும்
அலைகளோடு கரை
சேரும் சிப்பிக்குள்
முத்தான கால் கொலுசு
கடைக்கண் பார்வை
கார்மேகக் குழல்
பூவையின்  புன்னகை
அத்தனை அழகையும் மிஞ்சி
காற்றில் தவழ்ந்து
என் காத(தி)ல் சொல்லும்
கன்னியவள் கால் கொலுசு

நா.பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!