பாதக் கொலுசு மணி
குதி காலில் உரசுமடி
பட்டு பாதம் நோகுபடி
குதிகாலை தூக்கி நின்னா
நானும் வாடு வேண்டி
வலியை நெஞ்சில் தாங்கு வேண்டி
கைமுட்டி மடக்கி வைச்சு
காலமெல்லாம் கால் அடியில்
நானிருப்பேன் காலணியாய்
பாதுகையாக ஆன போதும்
உன்னை தலையில தாங்கிடுவேன்
சிரசுல நீ இருந்தா
சிவ நடனம் ஆடிடுவேன்
சர் கணேஷ்