ஓட்ட வீரனின் கால் தடம்
புழுதி படிந்த பாதையிலே,
பதிந்த காலடித் தடம்.
வேகத்தின் சாட்சியாய்,
ஒவ்வொரு அடியும் ஒரு பண்.
மூச்சிரைக்க ஓடினாலும்,
குறையாத அந்த வேகம்.
வெற்றிக் கோட்டை நோக்கி,
பாயும் ஒரு யுகம்.
கால் தடங்கள் மறையலாம்,
ஆனால் ஓடிய அந்த வேகம்,
மனதில் என்றும் நிலைக்கும்,
வெற்றியின் கீதமாக ஒலிக்கும்.
இ.டி.ஹேமமாலினி