தைதையென தைத்திடும் தையல் துணையாலே
நைநையென நைந்த வாழ்வும் துளிர்த்திடுமே
தன் மானம் காக்கச்செய்யும் தையலது
தன்மானமாய் வாழ்ந்திட தன்னம்பிக்கையும் தந்திடுமே
தையலாள் தைப்பதால் தையலெந்திரம் என்றானதோ!
தைக்கின்றனரே ஆண்களுமே வாழ்வின் கிழிசலகற்றிடவே
தைக்கும் துணி பழசானாலும் புதுசானாலும்
தராதரம் பாராதே பழுதகற்றி புத்துருவாக்கிடுமே
துணியை தைத்திட்டே துணிவளித்திடுமே வாழ்ந்திடவே
தத்தம் பணியாற்றியே தனித்துவமாய் வாழ்ந்திடுவோமே…
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
படம் பார்த்து கவி: தைதையென
previous post