ஊசி நூல் உளி கொண்டு அருவத்தை உருவமாக்கும்
ஆர்பாட்ட சிற்பி
வற்றா தொழிலின்
வளமை மூலம்
வாழ வைப்போதோ
ஊரில் ஏராளம்
முடக்கப்பட்டு அடக்கப்பட்ட சிறகுகளின் சீரிய வானம்
சிந்தையால் விந்தை செய்யும் கலைஞனின் அடையாள ஆயுதம்
இடையறாத இசையால் தடையறாத ஒளி தந்து
தரணியில் சுவடு தரும்
தன்னம்பிக்கைச் சுடர்!
புனிதா பார்த்திபன்
படம் பார்த்து கவி: ஊசி
previous post