புலனாகும் உறவுகளை புதைத்தே உரமாக்கி
புவனத்தில் முளைத்ததுவோ புலனாகா புலனம்
தூர இருப்பவரை அருகாக்கிட உருவாக்கி
அருகில் இருப்பவரையும் தூரமாக்கிடும் துரதிஷ்டம்
அருகில் அனைத்துமே அழைத்ததும் கிடைத்திட
அருமையான கருவியிதை முறையென பயன்படுத்தி
அருகிவரும் மனிதத்தையும் மீட்டெடுக்கவே முயன்றிடுவோம்
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
படம் பார்த்து கவி: புலனாகும்
previous post