படம் பார்த்து கவி: சின்னஞ்சிறு

by admin 3
7 views

சின்னஞ்சிறு விரல்களால் தீண்டும்போது,
புதுப்புது சித்திரங்கள் பிறக்கும்.
பாடம் சொல்லும் போதெல்லாம்,
பல வண்ணக் கோடுகள் மலரும்.
சில நேரம் உடைந்து போகும்,
மனதில் சிறு வருத்தம் தோன்றும்.
ஆனாலும் அதன் சுவடுகள் என்றும்,
ஞாபக அடுக்குகளில் ஒளிர்ந்திருக்கும்.
அந்த கரும்பலகை ஒரு காவியம்,
சாக்பீஸ்கள் அதன் தூரிகைகள் அன்றோ!

இ.டி.ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!