பதினாறு முத்துக்கள் ஒருங்கே சேர்ந்தது போல,
ஒவ்வொன்றும் ஒரு தனி அழகுடன் ஜொலிக்கின்றன.
வெள்ளை நிறத்தின் தூய்மை ஒருங்கே கூடிவர,
கடற்கரையின் மடியில் ஓர் அழகிய தோற்றம்.
ஒன்றுக்கொன்று போட்டி போடும் வெண்மையான நிறம்,
ஒவ்வொன்றும் சொல்லும் கடலின் ஒரு கதையை.
அலைகளின் தாலாட்டில் ஆனந்தமாக கிடக்கும்,
பதினாறு சோழிகளும் பேரழகுதான் கண்ணே!
அலைகள் வந்து மோதும் அழகிய கடற்கரையில்,
வெள்ளை நிறச் சோழி
முத்துப்போல் மின்னும் அதன் வெண்மையான மேனி,
கடலின் மௌன கீதம் மெல்ல உரைக்குது.
சிறு பிள்ளை கையில் தவழும் பொம்மை போல,
மணலில் புரண்டு விளையாடும் அந்த சோழி.
சூரியனின் ஒளி பட்டு ஜொலிக்கும் அதன் தோற்றம்,
இயற்கையின் ஓவியம், என்ன ஒரு காட்சி!
உன் வெண்மையில் தெரியும் அமைதி எனக்குப் பிடிக்கும்,
உன் மெல்லிய ஓசையில் கரையும் என் கவலைகள்.
கடற்கரையின் அழகில் நீயும் ஒரு அங்கம்,
வெள்ளைச்சோழியே, நீ என்றும் அழகுதான்!
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: பதினாறு
previous post