இதமாய் ஈரம் துவட்டும் மெல்லிய துணி/
பதமாய் பாலகனை வைத்திருக்கும் விதம் தனி/
அழகாய் பார்த்துப் பார்த்து வாங்கிய தாய்/
பழகும் நாளில் மகிழ்வைத் தரும் சேய்/
பாராட்டி சீராட்டி வளர்த்து ஆளான பின்னால்/
அன்னையை மதிக்காமல் ஏறிவந்த ஏணியை உதைப்பானோ?/
கற்பனையில் மிதந்தவளின் மனம் துணுக்குற்றது நியாயம்தானே
..பெரணமல்லூர் சேகரன்