காளையல்ல அது,
குல தெய்வம்!
மண் காக்கும் மரபு, மனம்போற்றும் வீரம்.
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம்,
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, வீர விளையாட்டு.
வளர்ந்ததோர் காளை, தமிழன் குடும்பத்தின் சொத்து,
பண்படுத்திப் போற்றுவோம், பரம்பரைப் பொக்கிஷம்.
அடங்க மறுப்பதோ, தமிழன் தன்மானம்,
அடக்கி ஆள்வதோ, தமிழன் பாரம்பரியம்.
எதிர்ப்புகள் வரினும், ஈர்ப்புகள் குறையாது,
ஜல்லிக்கட்டு என்பது, தமிழர் மூச்சாகும்.
நெஞ்சில் உரத்தோடும், நெறிப்படி வாழ்ந்திட,
ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு, தமிழன் அடையாளமாகும்!
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: காளையல்ல
previous post