ஒளிபடும் பிம்பங்கள், ஓடும் ஒலிகள்,
உன் உள்ளேதான் உறைந்து கிடக்குமே.
ஒருமுறை ஏற்றினால், உலகம் திறக்கும்,
அறிவுப் பசிக்கு அருமருந்தாமே.
மெல்லிய பட்டுப் போன்ற உன் மேனி,
மின்னும் தகவல்களை மறைக்குமே.
விரும்பிய நேரம், விரும்பிய விதம்,
வேண்டியதை வாரி வழங்குமே.
காதல் கீதங்கள், கல்விச் செல்வங்கள்,
காணாத இடங்கள், காணும் படங்கள் –
கணப்பொழுதில் கண்முன் நிறுத்தும்,
காலத்தால் அழியாத உன் சேவை.
ஓய்வின்றி சுழலும் உன் மையத்தில்,
ஊரெங்கும் பரவும் தகவல்கள்.
தலைமுறை தாண்டி உன் தாக்கம்,
தொழில்நுட்பத்தின் தலைசிறந்த சிற்பமே!
வண்ணங்கள் மின்னும் வட்டமே,
ரகசியங்கள் உன்னில் உறங்குமே!
பாடல்கள், படங்கள், தகவல்கள் –
அனைத்தையும் தாங்கிடுவாய் அன்பே!
நேற்றைய நினைவுகள், நாளைய கனவுகள்,
உன் சுழற்சியில் உயிர்பெறுமே!
காலம் கடந்தும் நீ துணை,
கணினி உலகின் காவியமே!
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: ஒளிபடும்
previous post