படம் பார்த்து கவி: திசைகாட்டி

by admin 3
1 views

திசைகாட்டி!
கதிர் மறையும் நேரம், கடல் அலைகள் ஓயும் நேரம்,
பாறையின் மேல் படுத்திருக்கும் திசைகாட்டியே!
வழி தேடும் படகுகளுக்கும், பாதை தேடும் பாதசாரிக்கும்,
நீயல்லவோ ஒளியாய், உயர்வாய் இருக்கிறாய்?
வானத்தின் விண்மீன்கள் மறையலாம் ஒருநாள்,
கடலின் ஆழங்கள் மாறலாம் ஒருநாள்,
உன் ஊசியின் முனை மட்டும் அசைவதில்லை,
சரியான திசையைக் காட்டாமல் ஓய்வதில்லை.
காற்றின் திசை அறிந்து கடல்பயணம் செய்வாரும்,
பூமியின் சுழற்சி அறிந்து வழி நடப்பாரும்,
உன் உள்ளிருந்து வரும் உறுதியான வழிகாட்டுதலில்,
நிம்மதியாய் வாழ்கிறார் நிதமும் உந்தன் நிழலில்!

இ.டி.ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!