திக்கு தெறியாதே தவித்து தளர்ந்திருக்கையிலே
திசையெலாம் தடங்களிட தடங்கலகற்றி தெளிவூட்டியே
துவள்கையிலே துணையிருந்து துணிவும் தந்து
தனித்திருந்தே தனித்துவமாகிட தன்னிலை தானுணர்த்தி
தனியே தவிக்கவிட்டு தூரமாகிய திசைகாட்டியாம்
தோழனவன் துணையினையே தேடுகிறேன் திக்கெட்டிலும்
தொலைந்தவனை தேடித்தரும் திசைகாட்டியுமுளதோ தேசமெதிலும்
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
படம் பார்த்து கவி: திக்கு
previous post