சோறு கண்ட இடம் சொர்க்கமாகுமாம்
வேறு தேவை ஏதுமில்லையோ வாழ்ந்திடவே
உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோராம்
உயிரின் தேவை உணவே தானோ
இறவாதிருக்க மூச்சுக்காற்றது முக்கியம் போலே
இயல்பாய் இயங்கிட உணவும் வேண்டுமே
உடல் இயங்க உணவு என்றால்
உள்ளம் இயங்க உள்ளன்பு தேவையறிவீரோ
தன்னலம் கருதி தானியம் விதைத்தால்
தரணியுளோர் யாவரும் உண்டிட கூடுமோ
உலையில் அரிசி சமைப்பவர் எவரும்
விலையில்லா அன்பையும் சமைத்தே தருகிறதால்
உடலும் உயிரும் உணர்வாய் ஆகிடுதே
உண்ணும் பொழுதெல்லாம் உணவை தாண்டியே
உன்னல் வேண்டுமே உணவாக ஆக்கியவரை
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
படம் பார்த்து கவி: சோறு
previous post