படம் பார்த்து கவி: அருந்தவும்

by admin 3
2 views

அருந்தவும் அரைவயிற்றுக்கும் உணவில்லா வறியவரும்
விருந்தென வயிற்றுக்குண்டபின் மீந்ததை வீணாக்குவோரும்
ஒன்றெனவே ஓருலகிலே வாழ்ந்திருக்கும் நிலையது
நன்றெனவே ஆகாத நிலையிலா  நிலையன்றோ
தன்பசி போலன்றோ தரணியுளவர்க்கும் என்றுணர்ந்தே
பிறன்பசி போக்கவே பங்கிட்டு பகிர்ந்திடில்
பட்டினி பசியதை பார்க்கவும் இயலுமோ
இல்லாதோர்க்கும் இயலுமானதை அளிப்போம் என்றால்
எல்லாருக்கும் கிடைத்திடுமே எப்போதுமே விருந்துணவு

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!