படம் பார்த்து கவி: வாழ்க்கை

by admin 3
3 views

வாழ்க்கை நனைக்கும் நேரமம்மா.
கண்களை மூடி, கரம் கூப்பி,
கவிதை பாடும் மனமம்மா.
மேகம் கருக்க, மனமும் குளிர,
மேனியெங்கும் சாரல் துளிர.
ஈரத் தலையில் ரோஜா மலர,
இதயத்தில் அமைதி கலந்திட.
மழைத்துளிகள் முகத்தில் சிதற,
மந்திரங்கள் மனதில் எதிரொலிக்க.
இறைவனின் ஆசி பொழிந்தது போல,
இவளின் உள்ளம் குளிர்ந்திட.

இ.டி.ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!