படம் பார்த்து கவி: விதியின்

by admin 3
23 views

விதியின் பிடியில்
கதியற்ற போது
வண்ணமோ வடிவோ விருப்பத்தை உதறி
சீலை விலைச்சீட்டை விலக்கி விழி விரித்தவள்
வருடங்கள் கடந்து வலக்கை ஊன்றி நானெழ
விலை பார்க்காதே என சொல்லியும்
இருநூற்றுப் புடவை இரெண்டெடுத்து
மழலையாய் சிரிக்கிறாள்
குறுக்கிய கையின் சுவடோ
ஆசைப் பூக்களை
உதிர்த்த வயதோ
பிள்ளை உழைப்பென்ற சூதானமோ அறியேன்
எனக்காய் உழைத்து ஓய்ந்து போனவள் தனக்காய் எதைத் தான் தேடுவாள் இவ்வுலகில்!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!