படம் பார்த்து கவி:நீலவானின்

by admin 3
24 views

நீலவானின்
நிலவொளியும்
நீளுகின்ற
நில(வி)இருளை
நீக்கிடுமோ
நிலையெனவே…

இலாந்தரும்
இருளகற்றிடலாம்
இரவோன்
இலாதபோது
இரவினிலே..
இருப்பினும் ,

தேய்ந்தேனும்
தினமொளிரும்
திங்களினும்
தூயவொளி
தரக்கூடுமோ!?
தெள்ளெனவே….

மாய்ந்தே
மறைந்தே
மறுதினமும்
மீண்டே
மின்னியே
முழுதா(மதியா)குமே

ஓய்ந்தே
ஒழியாதே
ஒவ்வொன்றிலும்
ஒளிர்ந்தே
ஒளிர்விக்கும்
ஒளிர்மதியதுவாய்

ஒளிர்ந்தே
ஒளிர்வித்தே
வளர்ந்தே
வளர்வித்தே
வாழ்ந்திடுவோம் வாழ்நாளெலாமுமே…

குமரியின்கவி

சந்திரனின் சினேகிதி

சினேகிதா
ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!