படம் பார்த்து கவி: கைக்குள்

by admin 3
32 views

கைக்குள் வெண்ணிலா
இரவு வானில் தவழும் வெண்ணிலவே
மேற்கே தொலைந்த ஆதவன் விட்டுச்சென்ற
கதிர்களின் வெம்மை தாக்கியதோ அன்றி
எவரும் அறியா வண்ணம் கடலில் குதித்து
பூமித் தாயவள் கைகளில் ஏந்தியே நீராடல்
நடத்தினயோ? கையில் பந்து போல் தவழும்
நின்னைக் காண கண் கோடி
வேண்டுமடி இருள்போக்கிட வந்த தேவதையே!

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!