அலங்காநல்லூரின் அனல் காற்று,
காளையின் மூச்சில் கனலாகப் பரவும்.
கலப்பை ஏந்தியவன் கையால்,
காளைகளையும் அணைக்கும் வீரம்!
கொம்புகள் கூசும், கோபம் பொங்கும்,
காளையனும், மனிதனும் சரி நிகர் சமர்.
இது ஒரு போர் அல்ல,
உறவின் கொண்டாட்டம்!
தமிழ் கலாச்சாரத்தின் உயிர் நாடி,
காலத்தால் அழியாத கலையின் ஓசை.
ஜல்லிக்கட்டு தமிழன்
ரத்தத்தில் ஓடும்,
வீரத்தின் நிரந்தர அடையாளம்!
இ.டி. ஹேமமாலினி
படம் பார்த்து கவி: அலங்காநல்லூர்
previous post